சென்னையில் உள்ள நடிகர் விஷாலின் வீட்டின் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீவிர விசாரணை:
தமிழ் சினிமாவில், 2004 ஆம் ஆண்டு வெளியான “செல்லமே” படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் விஷால். இவருக்கு முதல் படமே ஹிட் அடித்தால் அடுத்து, சண்டக்கோழி, திமிரு, சிவப்பதிகாரம், தாமிரபரணி, மலைக்கோட்டை, அவன் இவன், துப்பறிவாளன், சண்டக்கோழி-2 உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருகிறார்.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
இதுமட்டுமல்லாமல் நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும் உள்ளார். நடிகர் விஷால் சென்னை அண்ணாநகர் காவல் நிலையம் அருகே உள்ள தனது வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன் தினம்(செப்.26) காரில் வந்த மர்ம நபர்கள், விஷால் வீட்டின் மீது ஏராளமான கற்களை வீசி தாக்குதல் நடத்தி விட்டு தப்பித்து சென்றுள்ளனர். இதனால் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் பெரும் சேதம் அடைந்துள்ளது.
பிக்பாஸ் 6: தேதி, நேரம் குறிச்சாச்சு பா.,எல்லாம் ரெடி ஆகிட்டீங்களா? வெளியான அதிகாரப்பூர்வ அப்டேட்!!
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து நடிகர் விஷால் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில், வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் நடைபெற்ற போது, நடிகர் விஷால் வெளிநாட்டில் திரைப்பட படப்பிடிப்பில் இருந்ததாக தகவல்கள் கூறுகிறது.