டொமினிக்கன் குடியரசில் உள்ள ஒரு கிராமத்தில் 90 குழுந்தைகளில் ஒரு பெண் குழந்தை ஆண் குழந்தையாக மாறும் விந்தை நடைபெற்று வருகின்றது. இதனால் பெண் குழந்தைகளை பெற்றெடுக்கும் பெற்றோர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
டொமினிக்கன்:
டொமினிக்கன் குடியரசில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்ததும் சிறுமிகள் சிலர் முழுவதும் சிறுவர்களாக மாறிவிடுகின்றனர். இந்த மர்மமான நோயினால் பாதிக்கப்பட்ட கிராமத்தை பற்றி இங்கு காண்போம்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
ஆறு ஆயிரம் பேரை மட்டுமே மக்கள் தொகையாக டொமினிகனின் லாஸாலினஸ் என்ற கிராமத்தில் 12 வயதை அடைந்ததும் பெண்கள் சிறுவர்களாக மாற தொடங்கியுள்ளனர். இந்த வினோதமான நிகழ்ச்சியினால் உலகில் உள்ள பல்வேறு ஆராச்சியாளர்களும் இந்த கிராமத்தை குறித்து ஆராய தொடங்கியுள்ளனர். இதனால் இது மர்மங்கள் நிறைந்த இடமாக கருதப்படுகிறது. இது ஏதேனும் முன்னோர்களின் சாபமாக கூட இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
வினோத மாற்றம்:
பெண்ணாக பிறந்து ஆணாக மாறும் இந்த நோயினால் பெண் குழந்தை பிறந்தாலே அங்கு வருத்தம் மட்டுமே மிஞ்சுகிறது. இதனால் இந்த கிராமத்தில் பாலின விகிதத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பெண்கள் குறைந்து ஆண்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. இந்த நோய்க்கு உள்ளூர் மொழியில் “க்வெடோசே” என்று அழைக்கிறார்கள். மரபணு மாற்றத்தினால் ஏற்படும் இந்த நோயை “சூடோஹோர்மார்ஃப்ராடைட்” என்று உலகில் அழைக்கிறார்கள்.
ஜூஸியான “கிரில் சிக்கன்” ரெஸிபி – வீட்லயே செய்யலாம் வாங்க!!
இந்த நோயினால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகள் தங்கள் 12 வயதை அடைந்ததும் அவர்களின் குரல் மற்றும் உருவ அமைப்புகள் மாறத்தொடங்குகின்றது. இந்த கிராமத்தில் 90 குழந்தைகளில் ஒருவர் இந்த நோயினால் பாதிக்கப்படுகின்றனர். இந்த நோய்க்கு என்ன காரணம் என்று பல ஆராச்சியாளர்களும் ஆராய்ந்து வருகின்றனர்.