அசைவ பிரியர்கள் சிக்கன், மட்டன், மீன், நண்டு, இறால் ஆகியவற்றை விரும்பி சாப்பிடுவார்கள், இருப்பினும் சிலர் ஆட்டு ஈரலை சாப்பிடாமல் ஒதுக்கிவிடுவார்கள். ஆனால் இரத்த சோகை உள்ளவர்கள் இதை சாப்பிட்டு வந்தால் விரைவில் உடம்பில் ரத்தம் ஊறும். மேலும் கர்ப்பிணி பெண்கள், தாய்மார்களுக்கு அவசியம் சாப்பிட வேண்டிய உணவு ஈரல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் “காரசாரமான மட்டன் ஈரல் வறுவல்” செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
- மட்டன் ஈரல் – 1/4 கிலோ
- பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – 100 கிராம்
- கீறிய பச்சை மிளகாய்- 2
- கடலை எண்ணெய் – தேவையான அளவு
- கறிவேப்பிலை – 1 கைப்பிடி
- இஞ்சி,பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
- மஞ்சள் தூள்-1 டீஸ்பூன்
- மிளகு தூள்-1 டேபிள் ஸ்பூன்
- மிளகாய் தூள்-1 டேபிள் ஸ்பூன்
- கொத்தமல்லி – சிறிதளவு
- உப்பு -தேவையான அளவு
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
செய்முறை:
முதலில் ஈரலை நன்றாக சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயில் தேவையான எண்ணெய் விட்டு, சூடானதும் கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும். இதையடுத்து இஞ்சி,பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகு தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கிளறி விடவும். இப்போது ஈரல் சேர்த்து வதக்க வேண்டும்.மேலும் 2 நிமிடம் கழித்து சிறிதளவு தண்ணீர் விட்டு மசாலா நன்றாக ஓட்டும் வரை வதக்கி, வேக விட வேண்டும். 15 முதல் 20 நிமிடத்திற்கு பின் பார்த்தால் ஈரல் நன்றாக வெந்து இருக்கும் இப்போது கொத்தமல்லி தூவி இறக்கினால், “காரசாரமான மட்டன் ஈரல் வறுவல்” தயார். இதை இட்லி, சாதம், தோசைக்கு வச்சு சாப்பிட்டு பாருங்க டேஸ்ட் அள்ளு.