இந்த இரண்டு பொருள் போதும்… ரெஸ்ட்ராண்ட் சுவையை மிஞ்சும் கிரீன் சில்லி மட்டன் கொத்து கறி!!!

0

அசைவ உணவுகள் எந்த அளவுக்கு பிடிக்குமோ அந்த அளவுக்கு அதை செய்வது என்பது கடினமான வேலை. மேலும் அந்த உணவு வகைகளை தயார் செய்வதற்கு தேவைப்படும் பொருட்களின் எண்ணிக்கையும் அதிகம். இந்நிலையில் மிகவும் ஈசியாக வெறும் இரண்டு பொருட்களை வைத்து கொண்டு சுவையான கிரீன் சில்லி மட்டன் கொத்து கறி எவ்வாறு செய்யலாம் என காணலாம்.

தேவையான பொருட்கள் 

 மட்டன் கொத்து கறி – 1/4 கிலோ

வெங்காயம் – 1

பச்சை மிளகாய் – 5

கறிவேப்பிலை – சிறிதளவு

மிளகாய் வற்றல் – 2

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு -தேவையான அளவு

மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

இஞ்சி – சிறிதளவு

பூண்டு – சிறிதளவு

மிளகு தூள் – 1/4 தேக்கரண்டி

செய்முறை

முதலில் மட்டன் கொத்து கறியை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். அதன் பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை  சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம் நன்கு சிவக்க வறுத்த பிறகு, அதில் மட்டன் கொத்து கறியை சேர்க்க வேண்டும்.

பின்பு அதனுடன் தேவையான அளவு தண்ணீர், உப்பு மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். அதன் பின்னர் நறுக்கிய இஞ்சி, பூண்டு மற்றும் மிளகு தூள் சேர்த்து கொள்ளவேண்டும். பிறகு தண்ணீர் வற்றிய பின் கொத்தமல்லி தூவி அடுப்பை அணைத்து விடவும். இப்பொழுது சுவையான கிரீன் சில்லி மட்டன் கொத்து கறி தயார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here