திருவாரூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டாஸ்மாக் விடுமுறை:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே இருக்கும் இஸ்லாமியர்களின் புனித தலமான முத்துப்பேட்டை தர்கா பெரிய தந்தூரி விழா ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் மிகவும் முக்கியமான புனித சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு அன்று இரவு புனித ரகுலா சரீபுக்கு சந்தனம் பூசப்பட்ட சிறப்பு தொழுகை நடைபெறும்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அந்த தொழுகையின் போது உலகத்தில் பல நன்மைகள் நடைபெற வேண்டும் என்றும் விவசாயிகள் செழிப்பாக வாழ வேண்டும் என்று தொழுகை நடத்தி வழிபடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த வருடம் முத்துப்பேட்டை தர்கா பெரிய தந்தூரி விழா கொடியேற்றம் நாளை நடைபெற இருக்கிறது.
இதை வச்சிருந்தா மரண தண்டனை உறுதி., இன்று முதல் அமலாகும் புதிய சட்டம் – அரசு உத்தரவு!!
இதனை தொடர்ந்து சந்தனக்கூடு விழா வருகிற டிசம்பர் 4ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள். மேலும் இந்த விழாவில் எந்த வித அசம்பாவிதம் நடந்து விடக்கூடாது என்பதற்காக நாளை மற்றும் டிசம்பர் 4ம் தேதி அன்று டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட அரசு ஆணையிட்டுள்ளது.