ஸ்டுடியோ வாடகை கொடுக்காமல் அபேஸ் ஆகிய அனிருத் – உரிமையாளர் கையில் சிக்காமல் மும்பை பறந்த இசையமைப்பாளர்!!

0

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக உள்ள, அனிருத் சென்னையில் தான் வாடகைக்கு எடுத்த ஸ்டூடியோவுக்கு வாடகை செலுத்தாமல், மும்பைக்கு சென்று விட்டதாக வெளியான தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாகி உள்ளது.

பறந்துபோன அனிருத் :

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். விஜய் சேதுபதி, அஜித், ரஜினி கமல், சூர்யா, சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இதுவரை பிலிம்பேர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். தற்போது, உலக நாயகன்  கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த நிலையில், அனிருத் சென்னையில் உள்ள புகழ்பெற்ற, ஸ்டுடியோ ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார்.

அதன் வாடகை மாதம் 2 லட்சம் என சொல்லப்பட்டுள்ளது. பல நாட்களாக அந்த ஸ்டுடியோவுக்கு வாடகை கொடுக்காமல் இருந்த அனிருத், இது குறித்து உரிமையாளருக்கு எந்த விளக்கமும் தராமல் காலம் தாழ்த்தி உள்ளார். இதனால் கடுப்பான உரிமையாளர் அவரை தேடி சென்னைக்கு வந்துள்ளார். இதை அறிந்த அனிருத், விமானம் மூலம் மும்பைக்கு பறந்து விட்டதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. தற்போது இந்த செய்தி இணையத்தில் நெட்டிசன்களின் பேசுபொருளாகி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here