இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் முரளி விஜய், சர்வதேச அளவிலான அனைத்து தொடர்களில் இருந்தும் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
முரளி விஜய்:
இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரான, தமிழகத்தை சேர்ந்த முரளி விஜய், சர்வதேச அளவிலான அனைத்து வகை போட்டிகளில் இருந்தும் தான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2008ல் டெஸ்ட் தொடருக்கான சர்வதேச இந்திய அணியில் இடம் பிடித்த இவர், 2010ல் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் அறிமுகமானார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இவர், சர்வதேச அணியில் அறிமுகமாகி தொடக்க வீரராக தனது ஆட்டத்தை தொடங்கியவர். கடந்த 2018ம் ஆண்டு வரை, 61 டெஸ்ட், 17 ஒருநாள் மற்றும் 9 டி20 என 87 சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ள இவர் 4490 ரன்களை அடித்துள்ளார். அதன் பின், ஐபிஎல் தொடர்களில் மட்டும் கவனம் செலுத்தி வந்த இவர், தற்போது சர்வதேச அளவிலான அனைத்து போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.
IND vs NZ 2nd T20: “இந்த ஒரு மாற்றம் வித்தியாசமாக இருந்தது”…, தோல்வி குறித்து நியூசிலாந்து கேப்டன்!!
தனது, அதிகாரப்பூர்வமான டிவீட்டர் பக்கத்தில், இன்று பணிவுடன் எனது ஓய்வினை அறிவிக்கிறேன். இந்தியாவுக்காக விளையாடியதிலும், பிசிசிஐயுடன் பயணித்ததிலிலும் மிகுந்த பெருமை அடைகிறேன். 2002-2018 க்கு இடைப்பட்ட காலம் மிகவும் அற்புதமானது என்று கூறியுள்ளார் இவர், சக வீரர்களுக்கும், எதிர்கால வீரர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
@BCCI @TNCACricket @IPL @ChennaiIPL pic.twitter.com/ri8CCPzzWK
— Murali Vijay (@mvj888) January 30, 2023