
கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் டெங்கு காய்ச்சலின் பரவல் அதிகரித்து வருகிறது. அதாவது தொடர் மழை காரணமாக டெங்கு கொசுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் டெங்கு காய்ச்சலில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கும், போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் தேவையான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
Enewz Tamil WhatsApp Channel
இப்படி இருக்கையில் தற்போது தமிழகமெங்கும் பெய்து வரும் கனமழையால் ஆங்காங்கே மழை நீர் தேங்கி வருகிறது. இதனால் மக்கள் தொகை அதிகமாக இருக்கும் சென்னையில் தெருவோரங்கள் & தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்காமல் இருக்க ட்ரோன்கள் மூலம் கண்காணிக்க போவதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.