பாலிவுட் திரையுலகில் முக்கிய நடிகராக திகழ்பவர் நடிகர் சல்மான் கான். தற்போது இவருக்கு மும்பை மாஜிஸ்திரேட் கோர்ட்டு சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றம் சம்மன்:
இந்தி நடிகர் சல்மான் கான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மும்பை அந்தேரியில் சைக்கிள் ஓட்டிச் செல்லும் போது அவரை சில பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுக்க முயன்றுள்ளனர். இதனால் கோவம் அடைந்த சல்மான் கான் மற்றும் அவரது பாதுகாவலர், அசோக் பாண்டே என்ற பத்திரிகையாளரின் செல்போனை பறித்து மிரட்டியதாக கூறப்படுகிறது.
அந்த பத்திரிகையாளர் சல்மான் கான் மீது வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த போலீசார் தெளிவான விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதை தொடர்ந்து தற்போது சல்மான் கான் மற்றும் அவரது பாதுகாவலர் ஆகியோர் நேரில் நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் விசாரணையை அடுத்த மாதம் 5 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது நீதிமன்றம்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்