சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆசிரியர் வேலைக்கான நேர்காணல் செய்யப்பட்டது. இந்நிலையில் அந்த நேர்காணலுக்கு தயார் செய்யப்பட்டு இருந்த பெயர் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனியின் பெயர் இடம் பெற்று இருந்தது. மேலும் அவரின் தந்தை பெயர் பகுதியில் சச்சின் எனவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இது அங்குள்ள அதிகாரிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ரேஷன் கார்டு போன்றவற்றில் சில நேரங்களில் பெயர்கள், புகைப்படங்கள் என மாறி வருவதை கேள்விப்பட்டு இருக்கிறோம். இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்கர் மாவட்டத்தில் ஒப்பந்தமுறையில் ஆங்கில ஆசிரியர் வேலைக்கு அறிவிப்பை அறிவித்து இருந்தது. இந்த பணிக்கு பலர் விண்ணப்பித்து இருந்தனர். இந்நிலையில் இந்த பணிக்கான நேர்முக தேர்வு ஜூலை 2ம் தேதி நடைபெற்றது. இதில் 15 விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில் அதிக மதிப்பெண்களுடன் முன்னிலையில் மகேந்திர சிங் தோனி என்ற பெயர் இடம் பெற்று இருந்தது. மேலும் அவரின் தந்தை பெயருக்கான பகுதியில் சச்சின் டெண்டுல்கர் என இருந்தது. இதை கண்டு அதிர்ந்த போன அதிகாரிகள் அதில் குறிப்பிட்ட தொலைபேசி எண்ணிற்கு அழைத்தனர். ஆனால் அந்த எண்ணை தொடர்பு கொள்ள முடியவில்லை.
எனவே அந்த விண்ணப்பத்தை போலியானது என கருதி நிராகரித்தனர். மேலும் தோனி மற்றும் சச்சின் பெயரில் போலியாக விண்ணப்பித்தவர்கள் மீது காவல் துறையினர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த சம்பவம் பல கேள்விகள் மற்றும் குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்