இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி நாளை ரசிகர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
MS தோனி
41 வயதான தோனி தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் இதுவரை 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4876 ரன்கள் எடுத்துள்ளார். அதே போன்று 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 10773 ரன்களும், 98 T20 போட்டிகளில் விளையாடி 1617 ரன்கள் எடுத்துள்ளார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இவ்வளவு ரன்கள் குவித்த தோனி கடந்த 2020 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பிறகு தற்போது வரை IPL தொடரில் CSK அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் தோனி நாளை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். இந்த செய்தி ரசிகர்களிடையே காட்டுத்தீ போல் பரவி வருகிறது.
ஜூலியஸ் கோப்பை செஸ் போட்டி – ரூ.1.21 கோடி பரிசு தொகை அறிவிப்பு.., தட்டிச் செல்ல போவது யார்??
மேலும் தோனி IPL போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பை வெளியிட போவதாக சில விமர்சகர்கள் கூறி வருகின்றனர். ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இதனால் நாளை தோனி என்ன சொல்ல போகிறார் என ரசிகர்கள் பீதியில் உள்ளனர்.
He scares me more ?#MSDhoni pic.twitter.com/f37qig1KRF
— PavanTweetz 〽️ (@mrprincepavan) September 24, 2022