நடப்பு வருடம் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரை எதிர் நோக்கி இந்திய ரசிகர்கள் உள்ளனர். இதற்கிடையில், தென் ஆப்பிரிக்காவில் மும்பை, சன்ரைஸ், டெல்லி உள்ளிட்ட 6 அணிகள், கடந்த 10ம் தேதி முதல் விளையாடி வருகின்றன. வெளிநாட்டில் நடைபெறும் டி20 லீக் தொடர்களுக்கு, இந்திய வீரர்கள் விளையாட பிசிசிஐயானது அனுமதி தரவில்லை.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
ஆனால், சர்வதேச அளவிலான போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்களுக்கு, பிசிசிஐ அனுமதி அளித்தால் மட்டுமே வெளிநாட்டு லீக் தொடர்களில் பங்கு பெற வேண்டும் என கட்டளையும் உள்ளது. இந்நிலையில், தென்னாப்பிரிக்காவின் SA20 கமிஷனர் கிரேம் ஸ்மித், பிசிசிஐயின் கட்டளைகளை மதிக்கிறோம் என்று கூறியதுடன், தோனியை குறித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
“இனி ODI அவ்வளவுதா…, எதிர்வரும் காலம் T20 & T10 ஆதிக்கம் தான் இருக்கும்”…, இந்திய வீரர் ஓபன் டாக்!!
அவர் கூறியதாவது, எம்.எஸ் தோனியை போன்றே ஒருவர், SA T20 லீக்கில் இணைந்தால், லீக்கிற்கு அதிக மதிப்பு சேரும் என்றுள்ளார். இதனை தொடர்ந்து, இவர் எங்களுடன் இணைவதில் மிகவும் பெருமைப்படுவோம். வாய்ப்பு கிடைத்தால், கண்டிப்பாக தோனியை அழைப்போம் என்று கூறியுள்ளார்.