மல்லிகாவின் சர்ஜரிக்கு 5 லட்சம் செலவாகும் என்று கூறிவிடும் மருத்துவர் – நொந்து போன சக்தி! விறுவிறுப்பாகும் “மௌன ராகம்”!!

0

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “மௌன ராகம்” சீரியலில் இன்று சக்தியின் அம்மாவிற்கு உடல் நலம் மோசமாக இருக்கிறது என்று மருத்துவர்கள் கூறி விடுகின்றனர். தனது அம்மா நன்றாக வீடு திரும்ப வேண்டும் என்று சக்தி கடவுளிடம் வேண்டுகிறார்.

“மௌன ராகம்” சீரியல்

இன்று விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “மௌன ராகம்” சீரியலில் இன்று மல்லிகாவிற்கு உடல் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறி விடுகின்றனர். இதனால் சக்தி மிகவும் நொந்து போய் விடுகிறார். அப்போது தருண் கூடவே இருந்து உதவி செய்கிறார். சக்தி தருணை மருத்துவமனையில் இருந்து கிளம்ப வலியுறுத்துகிறார்.

தமிழகத்தில் தீவிரமடையும் கொரோனா நோய்த்தொற்று – தலைமை செயலாளர் அவசர ஆலோசனை!!

ஆனால், தருண் இனி சக்தியை காதல் என்ற பெயரில் இனி தொந்தரவு செய்ய மாட்டேன் என்றும் கூறுகிறார். இதனால் சமாதானம் அடையும் சக்தி சரி என்று கூறி விடுகிறார். பார்ட்டியில் இருந்து பாதிலேயே வந்து விடும் ஸ்ருதி தருணிற்கு போன் செய்கிறார். அவர் சக்தியுடன் இருப்பதால் தொடர்ந்து போனை கட் செய்து விடுகிறார். இப்படியாக இருக்க, ஸ்ருதிக்கு தருணின் நினைவு அதிகமாக வந்து விடுகிறது. தருணின் நண்பர்களுக்கு அவர் போன் செய்து கேட்கிறார்.

அவர்களும் தங்களுக்கு தெரியவில்லை என்று கூறி விடுகிறார். மருத்துவமனையில் இருக்கும் சக்தி மருத்துவர் வந்ததும் தனது அம்மாவின் உடல் நலன் குறித்து கேட்கிறார். அதற்கு மருத்துவர் அவர் மோசமான நிலையில் இருப்பதாகவும் அவருக்கு உடனடியாக சர்ஜரி செய்ய வேண்டும் என்று கூறுகிறார். அதற்கு 5 லட்ச ரூபாய் பணம் தேவைப்படும் என்றும் கூறி விடுகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் சக்தி நொந்து போய் விடுகிறார். அப்போது பணத்தினை பற்றி கவலை பட வேண்டாம் என்றும் தருண் தான் அதனை பார்த்து கொள்வதாகவும் கூறி விடுகிறார். இதனால் கோபம் அடையும் சக்தி இனி தனக்கு எந்த வித உதவியையும் செய்ய வேண்டாம் என்று கூறி விடுகிறார். தருணை மருத்துவமனையை விட்டு போகவும் சொல்லி விடுகிறார். இதனால் மனம் உடைத்து தருண் அந்த இடத்தினை விட்டு சென்று விடுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here