மௌன ராகம் சீரியல் ஒளிபரப்புவதில் ஏற்பட்ட சிக்கல் – அறிவிப்பை வெளியிடுமா படக்குழு!!

0

விஜய் டிவியில் தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்ட சீரியலில் ஒன்று மௌன ராகம். தற்போது இந்த சீரியலை தொடர்ந்து இரவு 10 மணிக்கு ஒளிபரப்புவதில் புதிய சிக்கல் ஒன்று எழுந்துள்ளது.

விஜய் தொலைக்காட்சிகளில் பல சூப்பர் ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. அதில் ஒன்று மௌன ராகம். இதன் முதல் பாகத்தால் கிடைத்த வெற்றியை தொடர்ந்து சீரியல் குழு இரண்டாம் பாகத்தை ஒளிபரப்ப தொடங்கியது. இரண்டாம் பாகமும் விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லாமல் அமைந்ததால் ரசிகர்கள் அடுத்தடுத்த எபிசோடுகளை எதிர்நோக்கி காத்திருந்தனர்.

மௌன ராகம் பார்ட் 2 விஜய் டிவியில் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகியது. பின்னர் கொரோனா தொற்றால் இந்த சீரியலின் படப்பிடிப்பு தடைபட்டது. தற்போது விஜய் டிவியின் மற்ற அனைத்து சீரியல்களும் எவ்வித தடையுமின்றி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ஆனால் இடையில் நிறுத்தப்பட்ட மௌன ராகம் பார்ட் 2 சீரியல் ஒளிபரப்பாகத்தால் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர்.

இந்நிலையில் இந்த சீரியலின் புதிய எபிசோடுகளை வரும் திங்கள் முதல் மதியம் 1 மணிக்கு ஒளிபரப்ப படக்குழு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் பழையப்படி இரவு 10 மணிக்கே ஒளிபரப்பும்மாரு கோரிக்கை வைத்து வருகின்றனர். இருப்பினும் படக்குழு இதுபற்றி எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தற்போது வரை வெளியிடவில்லை.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here