சக்தியிடம் தனது காதலை சொல்லிவிடும் தருண் – அதிர்ச்சியில் உறைந்து போன ஸ்ருதி!! பல திருப்பங்களுடன் ‘மௌனராகம்’!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மௌனராகம் சீரியலில் தருணுக்கு பிறந்தநாளை ஒட்டி ஸ்ருதி தருணுக்கு ப்ரொபோஸ் செய்ய திட்டமிட, தருண் சக்திக்கு தனது காதலை சொல்ல திட்டமிடுகிறார்.

மௌனராகம்

மௌனராகம் சீரியலில் நேற்று வருண் முன்னிலையில் லெட்டரை எரித்ததால் நெருப்பை பார்த்ததும் பயந்து அலறுகிறார். இதனை நேரில் பார்த்த கார்த்திக் கோவமடைகிறார். வருணின் அப்பாவிடம் வருணுக்கு என்ன நடக்குது அவனுக்கு என்ன பிரச்சனை என்று மிரட்டுகிறார் கார்த்திக்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அடுத்ததாக தருண் பிறந்த நாள் விழாவில் அனைவரையும் வரவேற்கிறார். இன்னும் சக்தி வராததை நினைத்து கவலையடைகிறார். ஒரு வேளை சக்தி வரமாட்டாளோ என்று பதட்டமடைகிறார். நேரம் போக போக தருணுக்கு பயம் அதிகரிக்கிறது. சக்தியை தேடிக்கொண்டே உள்ளார்.

சிம்பு அந்த குழந்தைக்கு பண்ண காரியத்தை பாருங்களே – வைரலாகும் புகைப்படம்!!

அதன் பின் சக்திக்கு கால் செய்ய போக அவரே வந்து விடுகிறார். தருணுக்கு கிஃப்ட் வாங்கி பச்சை நிற உடையில் அழகாக வருகிறார். கோவிலுக்கு சென்றதாக சொல்லி திருநீறு தருகிறார். என் காதலை ஏற்றுக்கொண்டால் போதும் என்று நினைத்து கொள்கிறார். அடுத்து ஸ்ருதி உள்ளே வருகிறார்.

தனது பிறந்த நாள் வாழ்த்தை தருணுக்கு சொல்கிறார். நிறைய கிஃப்ட் வாங்கி வைத்திருப்பதாகவும் சொல்கிறார். அதன் பிறகு மல்லிகை தருணின் வீட்டிற்கு வருகிறார். அப்பொழுது அங்கு கார்த்திக் புகைப்படத்தை பார்த்து ஷாக்காகிறார். தருணின் அப்பாவும் கார்த்திக்கிற்கும் என்ன சம்மந்தம் என்று யோசிக்கிறார்.

அடுத்து கேக் கட் செய்கின்றார் தருண். அடுத்து கார்த்திக் வருணின் அப்பாவிடம் சண்டையிடுகிறார். வருணுக்கு இப்படி ஒரு விஷயம் இருப்பதை ஏன் சொல்லவில்லை என்று சண்டையிடுகிறார். மேலும் நீங்க செய்தது பச்சை துரோகம் என்று சொல்லி வெளியே போக சொல்கிறார்.

மல்லிகை போட்டோவை பார்த்து ஷாக்காகி நிற்க தருணின் அத்தை இவரின் ஸ்கூலில் தான் சக்தி வேலை பார்க்கிறார் என்ற உண்மையை போட்டு உடைக்கிறார். அடுத்து தருண் சக்தியிடம் தனது காதலை சொல்லி விடுகிறார். இப்படி 4 பக்கமும் எல்லா விஷயமும் தெரிய வருகிறது. இதோடு எபிசோடு முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here