விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த மௌன ராகம் சீரியலில் தற்போது ஸ்ருதியாக நடித்திருந்த குழந்தையின் முதல் சீரியல் புகைப்படம் வைரலாகி வருகிறது.
மௌன ராகம்
மௌன ராகம் சீரியலில் இரண்டு குழந்தைகளை மையமாக வைத்து கதைக்களம் உருவாக்கப்பட்டது. அதாவது காதம்பரி கார்த்திகை அடம்பிடித்து திருமணம் செய்துகொள்கிறார்.
ஏற்கனவே மல்லிகாவை திருமணம் செய்துகொண்ட கார்த்தி வீட்டில் அனைவரின் வற்புறுத்தலால் காதம்பரியை திருமணம் செய்துகொள்கிறார். சக்தி மீண்டும் தன் அப்பாவிடம் வந்து விட காதம்பரியின் மகள் ஸ்ருதிக்கு இது சுத்தமாக பிடிக்கவே இல்லை.
சக்தியை பார்த்தாலே ஸ்ருதிக்கு சுத்தமாக பிடிக்காது. சிறு வயதில் இருந்தே பல பிரச்சனைகள் தான் இருவருக்குள்ளும். இதனால் தான் மல்லிகா வீட்டை விட்டே வெளியேறினார். இந்நிலையில் ஸ்ருதியாக நடித்து வந்த அந்த குழந்தை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சன் டிவியில் சக்கை போடு போட்டு வந்த பைரவி சீரியலில் ஸ்ருதி பாப்பா நடித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.