‘பணத்தை கொடுத்து சக்தியை கல்யாணத்திற்கு சம்மதிக்க வைத்ததை கண்டுபிடிக்கும் கார்த்திக்’ – தடுத்து நிறுத்துவரா??

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் மௌன ராகம் சீரியலில் கார்த்திக்கிற்கு சக்தி எந்த சூழ்நிலையில் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டுள்ளார் என்ற உண்மை தெரியவருகிறது.

மௌன ராகம்

மௌன ராகம் சீரியலில் தற்போது வருண் இத்தனை நாட்கள் திருமணம் வேண்டாம் என்று சொல்லி கொண்டிருந்த நிலையில் சக்தியை திருமணம் செய்ய ஒத்துக்கொண்டுள்ளார். இதனால் வீட்டில் உள்ள அனைவரும் சந்தோஷமாகின்றனர்.

ஷீலா எப்படியாவது வருண் வாழ்க்கையை அழிக்க வேண்டும் என்று அலைந்து கொண்டுள்ளார். மேலும் சக்திக்கு பண உதவி செய்து அதன் மூலம் திருமணம் செய்ய ஒத்துகொள்ள வைத்து விட்டார் மனோகர். அம்மாகாக அதையும் ஏற்றுக்கொண்டார்.

மனோகரும் இதுதான் நல்ல சமயம் என்று வேகமாக கல்யாண ஏற்பாடுகளை செய்து வருகிறார். இதில் பெரிய ட்விஸ்ட் தருணுக்கு சக்தி தான் அந்த பெண் என்பது தெரியாது. இப்படி இருக்க மனோகர் கல்யாண பத்திரிக்கையை கார்த்திக் வீட்டில் வைத்து விட்டு தயவு செய்து வராதீங்க என்று சொல்கிறார்.

பொண்ணு சத்யா என்று தெரிந்ததும் ஸ்ருதி சந்தோஷமடைகிறார். மேலும் கார்த்திக்கு சந்தேகமாகிறது. ஹாஸ்பிடலுக்கு சென்று விசாரிக்கிறார். அப்பொழுது மனோகர் தான் சக்தியின் அம்மாவை காப்பாற்றிய விஷயம் தெரிகிறது. அப்போ இதை வச்சு தான் கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சு இருக்காங்களா?? என்று கண்டுப்பிடிக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here