சக்தி தன்னிடம் விட்டு கொடுப்பது பாசமாக இருப்பதை பற்றி காதம்பரியிடம் சொல்லும் ஸ்ருதி – உண்மை வெளிவருமா??

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் மௌனராகம் சீரியலில் ஸ்ருதி சக்தியின் செய்கையால் சந்தேகமடைகிறார்.

மௌனராகம்

மௌனராகம் சீரியலில் நேற்றைய எபிசோடில் மல்லிகாவின் நியாபகம் வந்து காதம்பரியை மல்லிகை என்று அழைத்ததால் வீடே பரபரப்பானது. தான் தெரியாமல் பேசிவிட்டதாக சொல்லி செல்கிறார். இன்றைய எபிசோடில் சக்தி வேலைக்கு கிளம்புகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கார்த்திக் டீ குடித்துக்கொண்டிருக்க கால் வருவதை அடுத்து பேசிக்கொண்டுள்ளார். இதனால் டீ ஆறி விடுமோ என்று வேறு டீயை மாற்றி வைக்கிறார். இவை அனைத்தையும் ஸ்ருதி பார்த்து விடுகிறார். என்ன ஒரே செண்டிமெண்ட்டா இருக்கு என்று சொல்கிறார்.

எனக்கு எல்லார் மீதும் அக்கறை இருக்கு என்று கூறுகிறார். அப்போ நான் சொல்றதை செய்றியா என்று கேட்க சரி என்று ஒத்துக்கொள்கிறார். போய் தருணிடம் சென்று இனிமேல் தன்னிடம் பேச வேண்டாம் என்று சொல்ல சொல்கிறார். இதற்கு ஒத்துக்கொள்கிறார் சக்தி.

தினுசு தினுசாக போஸ் கொடுக்குறீங்களே யாஷிகா – திக்குமுக்காடிய இணையத்தளம்!!

தருணிடம் சென்று இனிமேல் தன்னிடம் பேச வேண்டாம் என்று சொல்கிறார். இதனால் தருண் ஷாக்காகிறார். அடுத்து ஸ்ருதி வந்து தான் விளையாடியதாகவும், அதனால் தான் சக்தி வந்து இப்படி சொல்வதாகவும் சொல்கிறார். அடுத்து வீட்டிற்கு வரும் சக்தி ஸ்ருதியை பற்றி மல்லிகாவிடம் சொல்கிறார்.

அடுத்து ஸ்ருதி காதம்பரியிடம் சக்தி செய்த காரியத்தை பற்றி சொல்கிறார். இனிமேல் அவள் யாரிடமும் பேச விடாமல் செய்ததாகவும் சொல்கிறார். மேலும் தன்னிடம் மிகவும் அன்பாக நடந்துக்கொள்வதாகவும், அக்கறையாக இருப்பதாவதும் சொல்ல காதம்பரிக்கு சக்தி மீது அதிகமாக சந்தேகமாகிறது.

ஒருவேளை அவள் சக்தியாக இருந்தால் நான் என்ன செய்வேன் என்றே தெரியாது என்று கோவமடைகிறார். அப்படி இருக்க வாய்ப்பில்லை என்றும் கூறி காதம்பரியை சமாதானம் செய்கிறார் ஸ்ருதி. இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here