கடைசியாக தன் அம்மாவை பார்க்க மனோகரிடம் மன்றாடும் சக்தி – ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்லும் வருண்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் மௌன ராகம் சீரியலில் தற்போது வருணுக்கும், சக்திக்கும் திருமணம் நடக்குமா?? நடக்காதா?? என்ற பெரிய ட்விஸ்டுடன் சீரியல் நடந்து கொண்டுள்ளது. இன்றைய எபிசோடை விரிவாக பார்க்கலாம்.

மௌன ராகம் 2

நீண்ட நாட்களுக்கு பிறகு சீரியல் ஒளிபரப்பானதால் இன்றைய எபிசோடுக்கு அனைவருக்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தான் இன்றைய எபிசோடில் வருண் பட்டுவேஷ்டி சட்டையில் கிளம்பி தயாராக இருக்கிறார். தருண் எதையோ பறிகொடுத்தது போல இருக்க வருண் என்ன என்று கேட்கிறார். ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார் தருண்.

அதன் பிறகு மனோகர் உள்ளே வர தன் மகனை இப்படி தான் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டதாக சொல்லி கண்கலங்குகிறார். அந்த பக்கம் சத்யா அழுகையுடன் தயாராகிக்கொண்டுள்ளார். தன் அம்மாவிற்கு மேக்கப் போட்ட நியாபகம் எல்லாம் வர கண்கலங்குகிறார். அடுத்ததாக மனோகர் அங்கு வந்து தன் மனைவியின் நகைகளை கொடுக்குறார்.

ரெடி ஆகி கீழே வரும் சக்தி மனோகரிடம் தன் அம்மாவை பார்க்க வேண்டும் என்று அழுகிறார். முகூர்த்தத்திற்கு நேரம் ஆகி விட்டதாகவும் இப்பொழுது வேண்டாம் என்று சொல்லி விடுகிறார். சக்திக்கு மனசு கேட்கவே இல்லை. காரில் வருணுடன் சேர்ந்து செல்ல தன் அம்மாவின் நியாபகம் வந்து கண்கலங்குகிறார்.

இதனை பார்க்கும் வருண் பதறுகிறார். தன்னை பிடிக்காமல் தான் அழுகிறாரோ என்று நினைக்கிறார். அதனை கேட்டும் விடுகிறார். தன் அம்மாவை பார்க்க வேண்டும் என்று சொல்லி அழுகிறார். வருண் கொஞ்ச நேரம் யோசிக்க அதன் பிறகு அழைத்து செல்கிறார். அங்கு தன் அம்மாவை பார்த்து கண்கலங்குகிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here