மௌனராகம் 2 – ‘இனிமேல் அந்த மியூசிக் ஸ்கூல் பக்கமே தல வச்சு படுக்க கூடாது’ – தருணை மிரட்டும் மனோகர்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் மௌன ராகம் சீரியலில் தருணை எப்படி திருமணம் செய்வது என கார்த்திக் குழப்பத்தில் உள்ளார். மேலும் காதம்பரி வேறு கார்த்திக்கிடம் இந்த விஷயத்திற்காக சண்டையிடுகிறார்.

மௌன ராகம்

மௌன ராகம் சீரியலில் வருணை பற்றி ஸ்ருதியின் பாட்டி கேவலமாக பேசியதால் மனோகருக்கு கடும் கோபமாகிறது. மேலும் பைத்தியக்காரன் என்று சொன்னதும் கோவத்தின் உச்சத்திற்கே சென்றார். மேலும் வருணுக்கு இன்னும் 1 வாரத்தில் திருமணம் செய்து வைத்து காட்டுவேன் என்றும் கூறுகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் கார்த்திக் மற்றும் மனோகர் இடையே நடந்த சண்டை ஸ்ருதிக்கு தெரிய வருகிறது. இதனால் தருணுக்கும் தனக்கும் கல்யாணம் நடக்குமா?? என்ற பயம் ஏற்படுகிறது. அடுத்ததாக மனோகர் கார்திக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்புகிறார். அடுத்ததாக ஸ்ருதி ஸ்கூலில் சத்யாவை தேடுகிறார்.

பிறகு கார்த்திக்கிடம் வந்து சத்தியாவை உடனடியாக வேலையை விட்டு தூக்க சொல்லி சொல்கிறார். அடுத்ததாக மனோகரன் வீட்டில் வந்து நடந்ததை நினைத்து ஷீலாவிடம் புலம்புகிறார். வருணுக்கு இன்னும் 1 வாரத்தில் கல்யாணத்தை நடத்தணும். நடத்துவேன் என்று சொல்கிறார்.

தமிழகத்தில் இன்று முதல் ஊரடங்கு அமல் – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!!

அப்பொழுது தருண் அங்கு வர இதனை கேட்ட ஷாக்காகிறார். ஏன் இத்தனை நாள் என்கிட்ட எதுவுமே சொல்லவே இல்லை என்று கூறுகிறார். மேலும் மனோகர் இனிமேல் தருணை மியூசிக் ஸ்கூலுக்கு போக வேண்டாம் என்றும் கூறுகிறார். இதனால் தருணுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here