வருணுக்கு இன்னும் ஒரு வாரத்துல கல்யாணம் பண்ணி காட்றேன் – கார்த்திக்கிடம் சவால் விடும் வருண் அப்பா!!

0

மௌன ராகம் சீரியலில் அனைத்து உண்மைகளும் கார்த்திக்கிற்கு தெரிய வர இன்று தருணின் அப்பா வீட்டிற்கு வந்து சமாதானம் பேசுகிறார். வீட்டில்  உள்ளவர்கள் அவரை அசிங்கப்படுத்த ஒரே  வாரத்தில்  வருணுக்கு  திருமணம் செய்து வைப்பதாக சவால்  விடுகிறார்.

மௌன ராகம்

மௌன ராகம் சீரியலில் வீட்டிற்கு வரும் தருணின் அப்பா தான் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்கிறார். மேலும் வருணுக்கு அப்படி ஒன்றும் ரொம்ப பெரிய நோய் கிடையாது. ஸ்ருதி என் பொண்ணு மாதிரி தான் என்று சொல்ல காதம்பரி கோவமடைகிறார். ஸ்ருதி உங்க பொண்ணு மாதிரி தான் உங்க பொண்ணு கிடையாது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

உங்களுக்கு ஒரு பொண்ணு இருந்து இந்த மாதிரி பையனை கட்டி வைப்பிங்களா?? என்று கோவமடைகிறார். தன் பையனுக்கு விரைவில் குணமடைந்து விடும் அந்த நம்பிக்கையில் தான் இந்த ஸ்ருதியை கட்டி வைக்க சம்மதித்ததாகவும் சொல்கிறார். கார்த்திக்கும் கோவமடைகிறார்.

கார்த்திக்கின் அம்மாவும் நல்ல வேளை இப்போவாவது உண்மை தெரிந்ததே என்று நிம்மதியடைகிறார். மேலும் காதம்பரி திரும்ப ஸ்ருதிக்கு திருமணம் செய்து வைக்க கட்டாயப்படுத்த வந்தீங்களா? என்று கேட்கிறார். அப்படி எல்லாம் கிடையாது. நம்ம நட்பு எப்போதும் போல இருக்கணும் என்று சொல்கிறார்.

ஸ்ருதியின் பாட்டி வருணை மன நோயாளி என்று கூறுகிறார். இதனால் வருணின் அப்பா கோவமடைகிறார். வருணுக்கு இருப்பது சின்ன பிரச்சனை தான். அவன் மன நோயாளி கிடையாது என்று கூறுகிறார். ஒரு கட்டத்தை தாண்டி ஸ்ருதி பாட்டி வருணை பைத்தியக்காரன் என்று சொல்ல வருணின் அப்பா கோவமடைகிறார்.

கார்த்திக்கும் பேசாமல் இருப்பதை பார்த்து கோவமடையும் வருணின் அப்பா வருணுக்கு ஸ்ருதியை விட நல்ல பொண்ணா பாத்து திருமணம் செய்து வைப்பதாக சொல்கிறார். அதுவும் ஒரே வாரத்தில் திருமணம் செய்து வைப்பதாக சொல்கிறார். கோவமாக வருணின் அப்பா வெளியே செல்ல ஸ்ருதி ஒன்றும் புரியாமல் நிற்கிறார்.

கியூட் & ஹாட்டாக ரீல்ஸ் செய்த யாஷிகா – கிறக்கத்தில் ரசிகர்கள்!!

வீட்டில் அனைவரிடமும் ஏன் அவரு கோவமாக போகிறார் என்று கேட்க நடந்தவற்றை சொல்கின்றனர். இதனால் கோவமடையும் ஸ்ருதி அனைவரையும் கண்டபடி பேசி விடுகிறார். என்ன தைரியம் இருந்த அவரை இப்படி பேசுவீங்க. இப்படி கோவமா போறவரு எப்படி எனக்கு தருணை கல்யாணம் பண்ணி வைப்பாரு. என்று சொல்ல குடும்பமே ஷாக்காகிறது. இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here