வருணை பார்த்தாலே எனக்கு சுத்தமா பிடிக்காது, அவருக்கு என்ன ஆனா எனக்கென்ன?? உண்மையை போட்டு உடைக்கும் ஸ்ருதி!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் மௌன ராகம் சீரியலில் 3 விதமான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இன்றைய எபிசோடில் ஸ்ருதி, சக்தி, மல்லிகா போன்றோர் எடுக்க போகும் முடிவு என்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.

மௌன ராகம்

மௌன ராகம் சீரியலில் மல்லிகா, ஸ்ருதி, சக்தி என மூன்று பேருக்கும் பெரிய ஷாக் என்றே சொல்லலாம். ஏனென்றால் இத்தனை நாட்கள் அவர்கள் ஒன்று நினைத்து காத்துக்கொண்டிருக்க ஆனால் நடந்ததோ வேறொன்று. வருணை தான் ஸ்ருதி காதலித்து கொண்டிருக்கிறார் என வீட்டில் உள்ள அனைவரும் நினைத்துக்கொண்டுள்ளனர்.

ஆனால் ஸ்ருதி தருணை காதலித்து வருகிறார். பெரிய ட்விஸ்ட் என்னவென்றால் தருண் சக்தியை காதலித்து வருகிறார். மேலும் வருணுக்கு இருக்கும் பெரிய பிரச்சனை இன்று கார்த்திக்கு தெரிய வர ஆத்திரமடைகிறார். அசையா வளர்த்த ஒரே பொண்ணு இப்படி ஆகிடுச்சே என்று கோவமடைகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அடுத்து மல்லிகா வீட்டில் கதறி அழுகிறார். ஏன் சக்தி என்ன ஏமாத்துன என்று புலம்புகிறார். என்னிடமே பொய் சொல்லும் அளவுக்கு வந்துட்டியா என்று அழுக திடீரென தலைவலி ஏற்படுகிறது. வீட்டில் வேறு யாருமில்லை. அடுத்து சக்தி வீட்டிற்கு கிளம்புவதாக சொல்கிறார்.

இதுதான் சமயம் என்று தருண் தனது மனதில் உள்ளவற்றை சொல்லி விடுகிறார். நீ என் வாழ்க்கை முழுசும் வந்தா நல்லா இருக்கும் என்று சொல்கிறார். மேலும் I Love U என்றும் சொல்லி விடுகிறார். இதனால் சக்தி கோவமடைகிறார். நீங்க இப்படி பண்ணுவீங்கனு நான் நெனச்சே பாக்கல என்று சொல்கிறார். இதனை ஸ்ருதி தூரத்தில் இருந்து பார்த்து விடுகிறார்.

முகேன் ராவின் “வேலன்” திரைப்பட ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ் – இணையத்தில் வைரல்!!

கதறி அழுதுகொண்டே வீட்டிற்கு செல்கிறார். கார்த்திக் வீட்டிற்கு வந்து நடந்த அனைத்து உண்மைகளையும் சொல்ல வீடு ஷாக்காகிறது. காதம்பரியால் என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஸ்ருதி ஆசைப்பட்டால் ஆனால் இப்படி ஆகி விட்டதே என்று அதிர்ச்சியில் உள்ளனர். அடுத்து ஸ்ருதி அழுதுக்கொண்டே வீட்டிற்கு வருகிறார். அனைவரும் என்ன என்று பதற ரூமில் சென்று கதவை மூடிக்கொள்கிறார்.

அனைவரும் பதறி கதவை தட்டுகின்றனர். கடைசியில் கதவை திறக்கிறார். அனைவரும் என்ன என்று கேட்க பிறந்த நாள் விழாவிற்கு தான் சென்றே இருக்க கூடாது என்று கதறி அழுகிறார். வீட்டில் உள்ள அனைவரும் வருணுக்கு உள்ள பிரச்சனை தெரிந்து விட்டதால் இப்படி நடந்து கொள்கிறார் என்று நினைத்து கொள்கின்றனர்.

இதனை கார்த்திக் வாய் திறந்து சொல்லி விடுகிறார். இதனை கேட்டு ஸ்ருதி ஷாக்காகிறார். வருணுக்கு என்ன நடந்தா எனக்கு என்ன??? அவரை எனக்கு பாத்தாலே பிடிக்காது என்று சொல்ல வீட்டில் உள்ள அனைவர்க்கும் மேலும் இடி விழுந்தது போல ஆகிறது. இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here