மௌன ராகம் 2 – தற்கொலைக்கு முயற்சிக்கும் வருணை காப்பாற்றும் சக்தி – மனோகர் எடுக்க போகும் முடிவு என்ன??

0

விஜய் டிவியில் மௌனராகம் சீரியல் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் தற்போது சக்தி மற்றும் வருண் இடையே முதல் சந்திப்பு ஏற்படுகிறது. இதனை மனோகர் ஒளிந்து இருந்து கேட்டு விடுகிறார்.

மௌன ராகம்

மௌன ராகம் சீரியலில் சக்தி தனது அம்மாவின் மருத்துவ செலவுக்காக வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டிருந்தார். இதனை தருண் மற்றும் கார்த்தி பார்த்து விட இதனால் ஷாக்காகின்றனர். தருணுக்கு சக்தி நம்மிடம் உதவி கேட்கவில்லையே என்று வருத்தமடைகிறார்.

அடுத்ததாக கார்த்திக்கு சக்தியின் நிலைமை மோசமாக இருப்பது தெரிந்தாலும் எதுவும் செய்ய முடியாமல் தவித்துக்கொண்டுள்ளார். இந்நிலையில் தருணுக்கு ஜோடி சக்தி தான் என்று நாம் அனைவரும் நினைத்து கொண்டிருக்க அதில் ஒரு பெரிய ட்விஸ்ட்டே ஏற்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதாவது வரனுக்கு ஜோடி சக்தி தான். இது குறித்த ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது வருண் மனமுடைந்து தற்கொலை செய்துகொள்ள செல்கிறார். அப்பொழுது பார்த்து சக்தி அங்கு வந்துவிட அவரை தடுத்து என்ன பிரச்சனை என்று கேட்கிறார்.

தன் அம்மா இறந்ததால் தனக்கு வந்த பிரச்சனையையை சொல்கிறார். மேலும் தன்னை அனைவரும் பைத்தியக்காரர் என்று சொல்கின்றனர் என்றும் சொல்லி அழுகிறார். சக்தி வருணுக்கு ஆறுதலளிக்கும் விதமாக பேசுகிறார். எதையும் எதிர்கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறார். இதனை மனோகர் தூரத்தில் இருந்து பார்த்து விடுகிறார்.

அமிர்தாவுடன் நெருக்கமாக பழக ஆரம்பிக்கும் எழில் – சந்தேகத்தில் அமிர்தாவின் அப்பா!!

மேலும் வருண் சக்தியிடம் உங்களை பார்த்ததும் எல்லா உண்மையும் சொல்லணும்னு தோணுச்சு அதான் சொல்லிட்டேன் என்றும் கூறுகிறார். ஏற்கனவே மனோகர் ஒரு வாரத்தில் வருணுக்கு கல்யாணம் செஞ்சு காட்டுவேன் என்றும் சொல்லி இருந்தார். அப்படி பார்த்தல் சக்தியின் குணம் அறிந்து வருணுக்கும் சக்திக்கும் திருமணம் செய்ய மனோகர் முடிவெடுக்க வாய்ப்புள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here