மௌன ராகம் சீரியலில் மல்லிகா உயிருக்கு போராடி கொண்டிருக்கும் நிலையில் கதம்பரிக்கு இவர்கள் மீது சந்தேகம் வந்து ஹாஸ்பிடலில் வந்து விசாரிக்கிறார். மேலும் ஆபரேஷனுக்கு தேவையான பணத்தையும் கட்டிவிட்டு செல்கிறார்.
மௌன ராகம்
வருணுக்கு இருக்கும் பிரச்சனைக்கு தன்னால் திருமணம் செய்துகொள்ள முடியாது என்று ஆடம் பிடிக்க மனோகர் விடாப்பிடியாக ஒரு சமந்தத்தை பேச அவர்களுக்கு வருண் பிரச்சனை தெரிந்து மனநலம் சரியில்லாத ஒருத்தனை எங்க தலைல கட்ட பாக்குறீங்களா?? என்று கண்டபடி பேசிவிட்டு செல்கின்றனர். இதனால் கோவமடையும் வருண் வீட்டை விட்டு கோவமாக செல்கிறார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இன்றைய எபிசோடில் காதம்பரி வந்து சக்தியிடம் அம்மாவை பார்க்க வேண்டும் என்று சொல்கிறார். சக்தி ஏதேதோ சொல்லி சமாளித்து வைக்க காதம்பரிக்கு மேலும் சந்தேகமாகிறது. அந்த நர்ஸிடம் சென்று சக்தி பற்றி விசாரிக்கிறார். அவரின் அம்மா பெயர் என்ன என்று கேட்க அதற்கு நர்ஸ் லட்சுமி என்று பொய் சொல்கிறார்.
அடுத்ததாக தானே மீதி பணத்தை கட்டுவதாகவும், அந்த விடியோவை டெலீட் செய்துவிடுங்கள் என்றும் கூறுகிறார். இதற்கு நர்ஸ் ஒத்துக்கொண்டு டெலீட் செய்து விடுகிறார். அடுத்ததாக கார்த்திக் இந்த பாட்டை தான் எங்கு பாடியுள்ளோம் என்று யோசித்துக்கொண்டிருக்க தெரிந்தவரிடம் இதனை விசாரிக்கிறார். இதுவரையிலும் இந்த பாடலை தான் எங்கேயும் பாடவில்லை என்று தெரியவருகிறது.
முதலமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி – அதிர்ச்சியில் மக்கள்!!
இது தனக்கும் சக்திக்கும் மட்டுமே தெரிந்த பாடல். அப்படி இருக்க சத்யாவிற்கு எப்படி தெரிந்தது என்று யோசிக்கிறார். அடுத்ததாக மல்லிகா மிகவும் உயிருக்கு போராடுகிறார். நர்ஸிடம் வந்து எவ்வளவு பணம் வந்திருக்கிறது என்று சத்யா கேட்க தான் டெலீட் செய்து விட்டதாக சொல்ல சத்யா ஷாக்காகிறார்.
காதம்பரி வந்து சொன்ன விஷயத்தை பற்றி சொல்கிறார். அவங்க எனக்கு ஒரு விஷயத்துலயும் ஹெல்ப் பண்ண மாட்டாங்க. இப்போ அவங்க பணமும் காட்டவே இல்லை என்று கதறி அழுகிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.