‘எனக்கு கல்யாணம்னு ஒன்னு நடந்தா அது உங்க கூடத்தான், இதுல எந்த மாற்றமும் இல்லை’ – தருணிடம் சவால் விடும் ஸ்ருதி!!

0

மௌன ராகம் சீரியலில் தொடர்ந்து பல பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. மேலும் காதம்பரிக்கு சத்யா தான் சக்தியாக இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. மேலும் ஸ்ருதி சக்தியை கண்டபடி பேசி விடுகிறார்.

மௌன ராகம்

மௌன ராகம் சீரியலில் சக்தி நேற்றைய எபிசோடில் கார்த்திக் வீட்டிற்கு வருகிறார். பாட்டியிடம் வந்து முரளியை பற்றி விசாரிக்கிறார். இதனால் கதம்பரிக்கு சத்யா மீது மேலும் சந்தேகம் ஏற்படுகிறது. மேலும் வீட்டை விட்டு துரத்துகின்றனர். இதனை பார்த்த தருண் சக்தியிடம் வந்து கெஞ்சுகிறார். ஏன் என்ன விட்டு விலகி போற என்று கேட்கிறார்.

ஐபிஎல் விதிமுறைகளை மீறிய இயோன் மோர்கன் – ரூ.12 லட்சம் அபராதம்!!

இதனை தூரத்தில் இருந்து ஸ்ருதி பார்க்க அவருக்கு பத்திக்கொண்டு வருகிறது. நேரடியாக ஹாஸ்பிடலுக்கு செல்கிறார் ஸ்ருதி. சக்தியிடம் தான் தருணை விரும்புவதாகவும், உன்னால் தான் எல்லாமே வந்துச்சு என்றும் கோவமடைகிறார். உன்ன பாத்தாலே எனக்கு பிடிக்கவில்லை என்றும் கூறுகிறார்.

மேலும் அம்மாவின் சர்ஜரி செலவுக்கு தேவையான பணத்தை தருவதாகவும் இனிமேல் இங்கு இருக்க கூடாது என்றும் கூறுகிறார். ஆனால் சக்தி பணத்தை வாங்கிக்கொள்ள மறுக்கிறார். அதன் பிறகு ஸ்ருதி தருணை பார்க்க வீட்டிற்கு வருகிறார். அவர் அவுட் ஹவுஸில் இருப்பதாக சொல்கிறார்.

மேலும் சக்தி அங்கு தான் தங்கி இருந்தார் என்ற விஷயமும் தெரிய வருகிறது. அவுட் ஹவுஸில் சக்தி புகைப்படத்தை பார்த்து கொண்டுள்ளார் தருண். அதனை பார்த்ததும் ஸ்ருதிக்கு கோவமாக வருகிறது. ஏன் தருண் இப்படி பண்றிங்க. அவ ஸ்டேட்டஸ் என்ன நம்ம ஸ்டேட்டஸ் என்ன?? அவ மேல உங்களுக்கு எப்படி லவ் வந்துச்சு என்று கேட்கிறார்.

இதனால் அதிரமடையும் தருண் அவள் மனசை பார்த்து தான் நான் லவ் பண்ணேன். லவ்வுக்கு மனசு தான் முக்கியம், ஸ்டேட்டஸ் இல்லை. உங்களுக்காக நான் எவ்வளவு பண்ணேன் தெரியுமா?? அந்த சத்யா நேத்து வந்தவள். உங்களை மதிக்காமல் அவள் என்னென்ன பண்ணி இருக்கா?? அப்பறம் எப்படி அவ பின்னாடி சுத்துறீங்க.

என்று சொல்கிறார். ஆனால் தருண் உன் மேல எனக்கு லவ் வரலை என்று சொல்கிறார். ஆனால் ஸ்ருதி விடாமல் எனக்கு கல்யாணம்மு ஒன்னு நடந்த அது உங்க கூட தான். அதுல எந்த மாற்றமும் இல்லை என்று சொல்கிறார். இதனை ஷீலா கேட்டு விடுகிறார்.

இதனை மனோகரிடம் சொல்லி விடுகிறார். இதனால் கோவமடையும் மனோகர் ஸ்ருதியை தேடி செல்கிறார். ஸ்ருதியை பார்த்ததும் கண்டபடி திட்டுகிறார். அண்ணன் செட் ஆகலைனு தெரிஞ்சதும் தம்பியை கல்யாணம் பண்ணிக்க ஆசை படுறியா என்று கேட்க ஸ்ருதி உடைந்து போகிறார். அடுத்து சக்தி மல்லிகாவை பார்க்க செல்கிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here