தற்போதைய காலகட்டத்தில் கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட பல தவறுகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. இதற்கெல்லாம் தண்டனைகள் அதிகம் என்று தெரிந்தும் சில தீய எண்ணம் கொண்ட நபர்கள் இதை தொடர்ந்து செய்ய தான் செய்கிறார்கள்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்நிலையில் திருச்சி அருகே 11 மாத குழந்தை உள்பட 2 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருச்சி எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்தவர் மனோஜ் குமார். அவருக்கு ஷோபனா என்ற மனைவியும் தஷ்வன், கபிஷன் என்ற 11 மாத குழந்தையும் உள்ளனர். தனது குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்த இவர் பர்னிச்சர் கடை சொந்தமாக நடத்தி வந்துள்ளார்.
அதில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அவ்வப்போது குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் பணியின் காரணமாக மனோஜ் குமார் கொடைக்கானலுக்கு சென்று, வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். வீட்டின் கதவை எவ்வளவு தட்டியும் அவரது மனைவி திறக்கவில்லை.
அவர் மனைவி என்ன தான் செய்கிறார் என்று ஜன்னல் பக்கம் பார்த்தார். அப்போது அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளனர். இதை பார்த்த அவர் மனமுடைந்து கதறி கதறி அழுதுள்ளார். சம்பவம் இடத்திற்கு வந்த காவல்துறை வழக்கு பதிவு செய்து இது கொலையா இல்லை தற்கொலையா? என்று விசாரித்து வருகிறார்கள்.