டெக்சாஸில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் தனது மகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அக்குழந்தையின் தாய் ஒரு துணிகர செயலை செய்துள்ளார். பள்ளியின் பாதுகாப்பு அம்சங்களை பற்றி அறிய விரும்பிய அந்த 13 வயது சிறுமியின் 30 வயது தாய் தன் மகளை போல வேடமிட்டு ஒரு நாள் முழுவதும் அந்த பள்ளியில் இருந்து உள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
குழந்தைகள் தங்கள் பள்ளிப்பருவத்தில் அதிக நேரம் செலவிடும் இடம் பள்ளி மட்டுமே.அங்கு அவர்கள் கல்வியை மட்டும் இல்லாமல் ஒரு வாழ்க்கை பாடத்தையே கற்றுகொள்கின்றனர். மேலும் அங்கு பல அனுபவ பாடங்களையும் புரிந்து கொள்கின்றனர். இந்நிலையில் அந்த பள்ளியின் பாதுகாப்பை உறுதி செய்வது பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் கடமையே.
இந்நோக்கில் தான் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள 30 வயது தாய் ஒருவர் தனது 13 வயது மகள் படிக்கும் பள்ளியின் பாதுகாப்பை சோதனை செய்யும் வகையில் தனது மகள் போல் உடையணிந்து அந்த பள்ளிக்கு சென்று உள்ளார். மேலும் நாள் முழுவதும் அந்த பள்ளியில் இருந்தும் உள்ளார். இதனை அங்குள்ள ஆசிரியர்கள் எவரும் கண்டுபிடிக்காத நிலையில் கடைசி வகுப்பின் போது மாட்டிக் கொண்டார் அந்த தாய். இந்நிலையில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!