சச்சினை தொட இன்னும் 2 தான் தேவை…, விராட் கோலி அதை செய்வாரா??

0
சச்சினை தொட இன்னும் 2 தான் தேவை..., விராட் கோலி அதை செய்வாரா??
சச்சினை தொட இன்னும் 2 தான் தேவை..., விராட் கோலி அதை செய்வாரா??

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் டிராபியில், அதிக சதம் அடித்த இந்திய வீரர்களுக்கான பட்டியல் வெளியாகி உள்ளது.

பார்டர் கவாஸ்கர் டிராபி:

இந்திய அணியானது, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடருக்காக தீவிரமாக தயாராகி வருகிறது. 4 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரானது, இந்தியாவின் நாக்பூர், டெல்லி, இமாச்சல பிரதேசம் மற்றும் அகமதாபாத் உள்ளிட்ட இடங்களில் நடைபெற இருக்கிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த பார்டர் கவாஸ்கர் டிராபியானது இதுவரை, 15 சீசன்களை கடந்துள்ளது. இதில் இந்திய அணியே 9 முறை வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பு ஆண்டுக்கான இந்த டிராபி வரும் 9ம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. இதிலும் இந்திய அணியின் வெற்றி தொடரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த டிராபியில் அதிக சதம் அடித்த இந்திய வீரர்களுக்கான பட்டியல் வெளியாகி உள்ளது.

ஒரே போட்டியில் 12 கோல்கள்…, தெற்காசிய கால்பந்து லீக்கில் அசத்திய இந்திய அணி!!

இதில், கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் 9 சதங்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்ததாக, சேசிங் மாஸ்டர் விராட் கோலி 7 சதங்கள் அடித்துள்ளார். இவர் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே 2 சதங்கள் அடித்து சிறந்த பார்மில் உள்ளதால், எதிர்வரும் டிராபியிலும் சதங்களை அடித்து சச்சின் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here