இந்தியாவில் 60 நாட்களுக்குப் பிறகு உள்ளூர் விமான போக்குவரத்து தொடங்கப்பட்டது. ஆனால் இன்று டெல்லியில் இருந்து புறப்பட வேண்டிய 80க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்ட காரணத்தால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
உள்ளூர் விமான சேவை
இந்தியாவில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் 2 மாதங்களுக்குப் பிறகு உள்ளூர் விமான போக்குவரத்து தொடங்கப்பட்டது. இதில் மத்திய அரசு மட்டுமின்றி பல்வேறு மாநில அரசுகளும் சில கட்டுப்பாடுகளை விதித்தன. தமிழகத்தில் 25 உள்ளூர் விமானங்களை மட்டுமே இயக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மும்பைக்கு தினந்தோறும் 50 விமானங்களை இயக்க மட்டுமே அம்மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்நிலையில் இன்று டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய 82 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.
விமானங்கள் ரத்து செய்யப்பட்டதற்கு அந்தந்த மாநில அரசுகள் அனுமதி வழங்காததே காரணம் என விமான நிலைய நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அம்பன் புயல் பாதிப்பால் கொல்கத்தாவில் வரும் 28ம் தேதி தான் விமான சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, பீகார், பஞ்சாப், அசாம் மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்கள் தங்களது மாநிலத்திற்கு விமானம் மூலம் வரும் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளன.
இந்நிலையில் இன்று கடைசி நிமிடத்தில் டெல்லி விமானங்கள் ரத்து செய்யப்பட்டு விட்டதாக அறிவிப்பு வெளியான காரணத்தால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இதனால் தங்களது முக்கிய நிகழ்ச்சிகளை தவறவிட்டு விட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |