தொடங்கியதா மூன்றாம் அலை?? புதுச்சேரியில் இரண்டே நாளில் 19 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று!!

0

இரண்டாம் அலை குறைந்து வரும் சூழலில் புதுச்சேரியில் இரண்டே நாளில் ஒரு வயதுக்குட்பட்ட 13 குழந்தைகள் உட்பட 19 குழந்தைகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல், மே மாதங்களில் அதிகரித்த கொரோனா பரவல் கடுமையான ஊரடங்கு மற்றும் தடுப்பூசி செலுத்துதல் ஆகியவற்றால் கட்டுக்குள் வந்தது. அதை தொடர்ந்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து சில பகுதிகளில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இந்தியாவில் மூன்றாம் அலை ஏற்படும் அபாயமும் நிலவி வருகிறது. ஏன்னென்றால் இரண்டாம் அலைக்கு காரணமான டெல்டா வகை கொரோனா வைரஸ் உருமாறி டெல்டா பிளஸ் ஆக மாறியுள்ளது. இதனால் மூன்றாம் அலை ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இந்த அலை குழந்தைகளை அதிகம் தாக்கும் என ஏற்கனவே நிபுணர்கள் கணித்து இருந்தனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் 2 நாட்களில் 19 குழந்தைகளுக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனைவரும் கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மூன்றாம் அலையின் தொடக்கமாக இருக்குமோ என மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here