ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது. மேலும் தொழில்நுட்ப வளர்ச்சி முன்னேற்றங்களில் மகளிர்கள் பங்குபெறும் விதத்தில் அனைத்து துறைகளிலும் சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதையடுத்து இலவச பேருந்து பயணம், பெண்களுக்கான பிரத்யேக பெட்ரோல் பங்க் என பல்வேறு ஏற்பாடுகளை மாநில அரசுகள் செய்து வருகிறது. இந்நிலையில் மாநிலங்களில் குடும்ப தலைவிகளின் நலன் கருதி மகத்தான திட்டத்துக்கு புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.
ஜல்லிக்கட்டில் பங்குபெற இவ்ளோ ரூல்சா? மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பால் மாடுபிடி வீரர்கள் வேதனை!!!
அதாவது புதுச்சேரி மாநிலத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப தலைவிகள் அரசின் எந்தவித உதவி திட்டங்களையும் பெறாமல் இருப்பின் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என புதுச்சேரி மந்திரி தேனீ ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் இத்திட்டத்தில் பங்குபெறும் குடும்ப தலைவிகளின் வயது வரம்பு 21 முதல் 55 க்குள் இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.