இந்தியாவில் உயரும் குரங்கு அம்மை தொற்று பாதிப்பு – வெளியான ஷாக்கிங் தகவல்!

0

இந்தியாவில் குரங்கு அம்மை நோயால் தற்போது வரை நான்கு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிதாக டெல்லியை சேர்ந்த நபருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் குரங்கு அம்மை நோய்:

கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் போன்று குரங்கு அம்மை நோயும் தினசரி அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இருப்பினும் அதனை கட்டுப்படுத்தும் விதமாக பல நோய் தடுப்பு முறைகளை அரசு தீவிரப்படுத்தி வருகின்றது. இந்த நோய் 76 வெளிநாடுகளில் அதிகமாக பரவி கிட்டத்தட்ட 16 ஆயிரம் நபர்களை பாதித்துள்ளது. இதனை தொடர்ந்து இந்தியாவில் மொத்தமாக 3 பேர் பாதிக்கப்பட்டு தனிமையில் வைக்கப்பட்டு சிகிச்சை எடுக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் டெல்லியை சேர்ந்த நபருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் தற்போது வரை குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது. தினமும் அதிகமாக வெளிநாட்டவர் வந்து கொண்டிருப்பதால் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் போன்ற இடங்களில் நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here