கிறிஸ்துவ மதபோதகர் மோகன் லாசரஸ் ஆண்டுக்கு 60 லட்சம் பேரை கிறிஸ்துவ மதத்திற்கு மத மாற்றம் செய்தால் 3 ஆண்டுகளில் தமிழகத்தை அசைத்து விடலாம் என பேசியுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
பகிரங்க பேச்சு:
ஒரு கூட்டத்தில் பேசும் கிறிஸ்துவ மதபோதகர் மோகன் லாசரஸ் பெந்தகோஸ்தே மாமன்றத்தில் 38 ஆயிரம் சபைகளில் 60 லட்சம் விசுவாசிகள் உறுப்பினராக உள்ளனர். 2020 ல் ஒரு விஸ்வாசி, ஒரு ஆத்மாவை கொண்டு வந்தால் (ஒருவரை கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றினால்), அடுத்த வருடம் 1.20 கோடி மக்கள்.
அதற்கடுத்த வருடம், அதற்கடுத்த வருடம் என 3 வருடத்தில் தமிழகத்தை அசைத்து விடலாம் என பேசினார் இந்த விடீயோவினால் தமிழகத்தில் தற்போது புதிய சர்ச்சை கிளம்பி உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |