உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் பேக்கப் வீரராக இடம் பிடித்த முகமது ஷமிக்கு அண்மையில் கொரோனா உறுதியாகியது. இதனால் அவர் கோவிட் சிகிச்சை மேற்கொண்டு ஓய்வில் இருந்தார். இதன் காரணமாக ஷமி உலக கோப்பை தொடரில் பங்கேற்க முடியாது என BCCI நினைத்தனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதனால் மாற்று ஏற்பாடுகளை மேற்கொண்டு தீபக் சாஹரை வேர்ல்ட் கப் தொடருக்கான இந்திய அணியில் தேர்ந்தெடுத்தனர். ஆனால் தற்போது ஓய்வில் இருந்த ஷமிக்கு மீண்டும் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை முடிவில் ஷமிக்கு நெகட்டிவ் என சான்றளிக்க பட்டுள்ளது. இதனால் அவர் மீண்டும் அணிக்கு திரும்புவது உறுதியாகிவிட்டது.
IND VS SA T20.., இரண்டு சூரப்புலிகள் மோதும் தருணம்.., வெற்றி யாருக்கு தெரியுமா?? வெளிவந்த ரகசியம்!!
இதன் காரணமாக உலக கோப்பை தொடரில் இடம் கிடைத்து விட்டது என்ற சந்தோஷத்தில் இருந்த தீபக் சாஹருக்கு இந்த செய்தி ஏமாற்றத்தை அளித்துள்ளது. மேலும் உலக கோப்பை இந்திய அணியில் பேக்கப் வீரராக இருக்கும் ஷமிக்கு, ப்ளேயிங் 11 னில் விளையாட வாய்ப்பு கிடைத்தால் பல மாயாஜால வேலைகளை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.