பிரதமர் மோடி பல திட்டங்களை துவக்கி வைப்பதற்கும், பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்கும் இன்று புதுச்சேரி செல்கிறார். இதனை முன்னிட்டு சென்னை வந்த அவர் தற்போது தனி ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரிக்கு பறந்தார்.
பிரதமர் மோடி:
இன்னும் சில நாட்களில் தமிழகம், புதுவை உட்பட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து மாநிலங்களிலும் பல திட்டங்களை துவக்கி வருகின்றனர். அந்த வகையில் புதுச்சேரியில் சுமார் ரூ.3,023 கோடி பதிப்பிலான திட்டங்களை துவக்க உள்ளனர். இதனை நாட்டின் பிரதமர் மோடி துவக்கி வைக்கவுள்ளார். இதற்காக மோடி டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று காலை சென்னை வந்தார். சென்னை வந்த மோடியை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வரவேற்றார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
பின்பு இன்று காலை சுமார் 10.20 மணி அளவில் மோடி தனி ஹெலிகாப்டர் மூலம் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு பறந்தார். அங்கு சென்ற அவர் முதலாவதாக ரூ.3,023 கோடி மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைக்க உள்ளார். பின்பு லாஸ்பேட்டையில் நடைபெறும் பிரம்மாண்டமான பாஜக பொதுக்கூட்டத்தில் மோடி உரையாற்ற உள்ளார்.
கேரளா, மராட்டியத்தில் இருந்து வருபவர்களுக்கு புதிய கட்டுப்பாடு – தமிழக அரசு அறிவிப்பு!!
இதனை தொடர்ந்து கோவைக்கு செல்கிறார். அங்குள்ள கொடிசியா மைதானத்தில் வைத்து இன்று மாலை பாஜகவின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. மாலை அந்த பொது கூட்டத்தில் மோடி கலந்துகொள்ள உள்ளார். இதனால் பாஜக தொண்டர்கள் தற்போது உற்சாகமடைந்துள்ளனர்.