கொரோனா தடுப்பூசி போடவில்லையெனில் மொபைல் போன் எண்கள் முடக்கப்படும் என பாகிஸ்தானின் பஞ்சாப் அரசு அதிரடியாக ஒரு அறிவிப்பை விடுத்துள்ளது.
கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவியதை தொடர்ந்து உலகின் பல நாடுகள் தங்கள் மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. கொரோனாவுக்கு எதிரான தற்போதைய தடுப்பூசிகள் அனைத்தும், கொரோனா தொற்றைத் தடுப்பதில்லை. ஆனால், தீவிர நோய் ஏற்படாமலும் மரணம் நிகழாமலும் தடுக்கும்.
இந்தியாவில் கோவிட்-19 தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16 அன்று தொடங்கியது. அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் பெரும்பாலான மக்கள் தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் செலுத்துகின்றனர். ஆனாலும் சில பேர் தடுப்பூசி பற்றிய தவறான புரிதலால் தடுப்பூசி செலுத்துவதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.
எனவே பாகிஸ்தானின் பஞ்சாப் அரசு, மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தவேண்டும் என்ற நோக்கில், தடுப்பூசி போடாதவர்களுக்கு தண்டனை கொடுக்கும் விதமாக அவர்களின் மொபைல் போன் எண்கள் முடக்கப்படும் என அறிவித்துள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்