இன்னும் சில தினங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தற்போது மீண்டும் மநீம கட்சி வேட்பாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
மநீம:
தமிழகத்தில் வருகிற மே மாதத்துடன் சட்டப்பேரவையின் ஆயுட்காலம் முடிவுக்கு வரவுள்ளது. இந்நிலையில் அனைத்து விதமான தேர்தல் பணிகளும் மிக முனைப்புடன் நடந்து வருகிறது. இது இப்படியென்றால் தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக 9,10 மற்றும் 11ம் வகுப்பு பள்ளிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவை பொறுத்தவரை கடந்த 110 நாட்களில் இல்லாத அளவிற்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்த சமயத்தில் தேர்தலை நடத்துவது தேர்தல் அதிகாரிகளுக்கு சற்று சவாலான ஒன்று. மேலும் இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி என்ற பெயரில் அரசியலில் களமிறங்குகிறார் கமல்ஹாசன். இவர் இந்த தேர்தலில் பல கட்சிகளுடன் கூட்டணி வைத்து கொண்டு முதல்வர் வேட்பாளராக களம் காண்கிறார். அதற்கான அனைத்து வேலைகளையும் மிக சிறப்பாக செய்து வருகிறார் கமல். தற்போது இவரது கட்சி சார்பாக பொன்ராஜ் என்பவர் அண்ணா நகர் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!
தற்போது இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இவரை சேர்த்து இந்த கட்சி வேட்பாளர்கள் 2 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. மேலும் தேர்தல் அறிக்கை வெளியிட்ட போது கமல் உடன் பொன்ராஜ் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் வேட்பாளர்கள் முதல் வாக்காளர்கள் வரை கொரோனா பரவுவதால் தேர்தல் நடைபெறுமா என்ற சிக்கல் எழுந்துள்ளது. மேலும் கொரோனா அச்சம் காரணமாக வாக்காளர்கள் வாக்களிக்க வருவார்களா என்ற சந்தகேமும் எழுந்துள்ளது.