இரண்டுல எதையாவது ஒன்ன செய்யுங்க…மத்திய அரசுக்கு முதல்வர் எழுதிய கடிதம்!

0

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகளை வழங்கவும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி, கடந்த ஜனவரி 16-ந் தேதியில் இருந்து நடந்து வருகிறது. தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு தற்போது நிலவி வருகிறது. ராகுல் காந்தி உட்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் நாட்டில் நிலவி வரும் தடுப்பூசி தட்டுப்பாட்டால் மத்திய அரசின் மேல் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

நிலவி வரும் தடுப்பூசி தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து மத்திய அரசு தடுப்பூசி உற்பத்தி மையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும், அல்லது தமிழக அரசுக்கு குத்தகைக்கு வழங்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைத்து பிரதமர் மோடிக்கு அவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

தற்போது சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர்.ஹர்ஷவர்தனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில் செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகளை வழங்குமாரு கூறப்பட்டுள்ளது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here