தமிழக பள்ளி மாணவர்களின் நலனுக்காக தமிழக அரசு பல நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது. சமீபத்தில் கூட அடிக்கும் கோடை வெயிலால் மாணவர்கள் அவஸ்தைப்பட கூடாது என்பதற்காக ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்க இருந்த நிலையில், ஜூன் 7ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்தார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் மாணவர்களுக்காக முதலமைச்சர் ஸ்டாலின் கல்வி உபகரணங்களை இலவசமாக வழங்க உள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த இவர் ” பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்களுக்கு பள்ளி புத்தகங்கள் உடனடியாக கிடைக்க தமிழக அரசு பல ஏற்பாடுகளை செய்துள்ளது.
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் கடைகளில் கணினி பில்லிங் முறை., கூடுதல் விலைக்கு இனி இடமில்லை!!!
மேலும் பள்ளிகள் திறந்து ஒரு வாரத்திலேயே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பாட புத்தகங்கள் வழங்கப்படும். இது மட்டுமல்லாமல் தமிழக முதல்வர் இந்த ஆண்டு முதல் மாணவர்களுக்கு 11 பொருட்கள் அடங்கிய கல்வி உபகரணங்கள் இலவசமாக வழங்க உள்ளதாகவும், இதற்கான இந்த திட்டம் அடுத்த மாதம் தொடங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.