டவ் தே புயலில் காணாமல் போன மீனவர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி – முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு!!!

0

தமிழகத்தை சேர்ந்த 21 மீனவர்கள் சமீபத்தில் ஏற்பட்ட ‘டவ் தே’ புயலில் காணாமல் போயுள்ளனர். இவர்களின் குடும்பத்திற்கு ரு.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சில நாட்களுக்கு முன் அரபிக் கடலில் உருவான டவ் தே புயலால்  குஜராத், ஒடிசா, கேரளா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது.  இந்த புயலால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களும் பாதிப்பை சந்தித்தன.ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் டவ் தே புயல் காரணமாக கரை திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.

நாகை, மயிலாடுதுறை, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 21 மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை. தற்போது அவர்களை தேடும்பணி நடைபெற்று வருகிறது. காணாமல் போன மீனவர்களை மே 15 முதல் இதுவரை  தொடர்ந்து தேடப்பட்டும் கண்டுபிடிக்க இயலாத நிலை உள்ளது.

இந்நிலையில் டவ் தே புயல் காரணமாக காணாமல் போன 21 மீனவர் குடும்பங்களின் நிலைமையை கருத்தில் கொண்டு ரூ.20 லட்சம் நிவாரணத் தொகையாக வழங்க முதல்வர் உத்தரவிட்டார்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here