11 வருஷமா பொண்ண தேடுனாங்க… ஆனா பக்கத்துல வீட்ல தேடல… கண்ணில் மண்ணை தூவிய காதல் ஜோடி!!!

0

கேரளா பாலக்காட்டில் உள்ள அயலூர் கிராமத்தில் சஜிதா என்ற பெண் 11 வருடங்களுக்கு முன் காணாமல் போயுள்ளார். தற்போது அவர் தங்கள் பக்கத்து வீட்டிலேயே காதலருடன் வாழ்ந்தது தெரியவந்துள்ளது.

சஜிதாவும், அவர் பக்கத்து வீட்டில் வசித்து வந்த ரஹ்மானும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் பெற்றோர்கள் தங்கள் காதலுக்கு சம்மதிக்க மாட்டார்கள் என்று சஜிதா 11 வருடங்களுக்கு முன்பாக இரவோடு இரவாக ரஹ்மான் வீட்டிற்கு வந்துள்ளார். பெண்ணை காணவில்லையே என பெற்றோர் காவல் துறையினரிடம் புகார் தெரிவித்தும் சஜிதாவை கண்டுபிடிக்க முடியவில்லை.

11 வருடங்களாக ஒரே அறையில் ரஹ்மானும் சஜிதாவும் வசித்து வந்துள்ளனர். தங்கள் வீட்டில் இப்படி ஒரு பெண் இருப்பது ரஹ்மானின் பெற்றோர்களுக்கும் தெரியாது. சமீபத்தில் மூன்று மாதங்களுக்கு முன் ரஹ்மான் தன் குடும்பத்தினரிடம் சண்டை போட்டுகொண்டு இன்னோரு கிராமத்திற்கு சென்று வசித்துள்ளார்.

ரஹ்மானை தேடிக்கொண்டு அவர் சகோதரர் ரஹ்மான் வீட்டிற்கு சென்றபோது கூடவே சஜிதா இருந்துள்ளார். அப்போதுதான் சஜிதா 11 வருடங்களாக யாருக்கும் தெரியாமல் ரஹ்மானின் அறையில் இருந்தது தெரியவந்துள்ளது. இவ்வாறு பக்கத்து வீட்டிலேயே 11 வருடமாக தங்கள் மகள் இருந்தது தெரிந்து சஜிதாவின் பெற்றோர் அதிர்த்துப்போயினர்.

சமூக ஊடகங்களில் Enewz Tamil :

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here