தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது – அமைச்சர் விஜயபாஸ்கர்..!

0

தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை நல்ல பலனை தருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

பிளாஸ்மா சிகிச்சை நல்ல பலன் தருகிறது..!

புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி அருகில் ரூ.9.15 கோடியில் அமைக்கப்பட உள்ள பூங்கா கட்டுமானப் பணியை இன்று அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு 44 மையங்களில் பிளாஸ்மா சிகிச்சை அளிப்பதற்கு ஐ.சி.எம்.ஆர். ஒப்புதல் வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.

plasma therapy treatment
plasma therapy treatment

தமிழகத்தில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தான் அதிக எண்ணிக்கையில் பிளாஸ்மா சிகிச்சை 26 பேருக்கு அளிக்கப்பட்டதில் 24 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.

சூரத்தில் வைரக்கற்கள் பதித்த மாஸ்க் – விலை எவ்ளோன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

எனவே உயர்தர மருத்துவமனைகளில் தேவைகளுக்கு ஏற்ப பிளாஸ்மா சிகிச்சை விரிவுபடுத்தப்படும். மேலும் பிளாஸ்மா சிகிச்சைக்காக 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உபகரணங்கள் வாங்க வேண்டும் எனவும் இச்சிகிச்சையில் தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது எனவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here