Saturday, April 20, 2024

ரஹ்மானுக்கு அமைச்சர் வேலுமணி ஆதரவு – சதி செய்பவர்கள் கண்டிக்கத்தக்கவர்கள் என ட்வீட்!!

Must Read

சில நாட்களுக்கு முன் இசையமைப்பாளர் ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் தனக்கு எதிராக சிலர் சாதி செய்கின்றனர் என்று கூறினார், அதற்கு அமைச்சர் வேலுமணி அவருக்கு ஆதரவாக ட்வீட் ஒன்றை பதிவு செய்து உள்ளார்.

ரஹ்மான் ட்வீட்:

கடந்த சில நாட்களுக்கு முன் இசையமைப்பாளர் ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் தனக்கு படவாய்ப்புகள் கிடைக்க கூடாது என்று சிலர் சதி திட்டம் தீட்டி வருகின்றனர் என்று குற்றம் சாட்டி இருந்தார். தான் ஆஸ்க்கார் விருது பெற்றவுடன் சிலர் எனக்கு எதிராக சதி செய்து வருகின்றனர் என்று ட்வீட் செய்து இருந்தார்.

இதற்கு பலர் ரஹ்மானுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தனர். இதற்கு இந்தி இயக்குனர் சேகர் கபூர் “உங்களை எங்களால் ஹண்ட்லே செய்ய முடியவில்லை” என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Oscar-Winning Composer A.R. Rahman
Oscar-Winning Composer A.R. Rahman

இயக்குநர் சேகர் கபூரின் கருத்துக்குப் பதிலளிக்கும் விதமாக ஏ.ஆர்.ரஹ்மான், “இழந்த பணம் திரும்ப வரும், புகழ் திரும்ப வரும். ஆனால், நம் வாழ்வில் முக்கியமான தருணங்கள் திரும்ப வராது. அமைதியாக இருங்கள். கடந்து செல்வோம். நாம் செய்ய வேண்டிய மிகப்பெரிய விஷயங்கள் உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

ரசூல் பூக்குட்டியும் புகார்:

இதனை அடுத்து, ஆஸ்கர் விருது பெற்ற சவுண்ட் என்ஜினீயர் ரசூல் பூக்குட்டியும் என்னையும் சிலர் நிராகரித்தனர், என்று இந்த டீவீட்டை டேக் செய்து இருந்தார். அவரும் தான் பல நிராகரிப்புகளை சந்தித்தேன் என்று தெரிவித்து இருந்தார்.

அமைச்சர் ஆதரவு:

இப்படியான நிலையில், பலரும் ரஹ்மானுக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர். தற்போது, அமைச்சர் வேலுமணி தனது ஆதரவை ரஹ்மானுக்காக கூறியுள்ளார். அவர் கூறியதாவது ” மக்களின் மனதை மட்டும் அல்லாமல், இசையால் இமையம் தொட்டவர் ரஹ்மான்.

இன்றைய பங்குச்சந்தை நிலவரம்!! அல்ட்ராடெக் 7% உயர்கிறது!!

ADMK minister comes in support of AR Rahman
ADMK minister comes in support of AR Rahman

அவர் தனக்கு எதிராக சிலர் செயல்படுகிறார்கள் என்று குறியாதுஇ வருத்தத்தை அளிக்கிறது. இவருக்கு எதிராக சதி செய்பவர்கள் கண்டிக்கத்தக்கவர்கள். ரஹ்மானுக்கு எனது மனப்பூர்வமான ஆதரவு உண்டு” என்று தெரிவித்து உள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழகத்தில் தாறுமாறாக உயர்ந்த காய்கறிகளின் விலை…, ஒரு கிலோவின் முழு நிலவரம் உள்ளே!!

தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்துதான் அதன் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -