உலக பொருளாதார வளர்ச்சியில் மந்த நிலை நிலவுவதால் வேலையில்லா திண்டாட்டம் வலுப்பெற்று வருகிறது. இதனால் போட்டித்தேர்வு, வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இதையடுத்து மத்திய, மாநில அரசுகளின் போட்டி தேர்வில் மாணவர்கள் எளிதில் வெற்றி பெற இலவச பயிற்சி வகுப்பை சேப்பாக்கம் மாநில கல்லூரியில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி “தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பினரும் மத்திய, மாநில அரசு பணிகளில் பணிபுரிய வேண்டும் என்பதே எங்களது இலக்கு.
மேலும் மத்திய அரசு பணியிடங்களில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் 2% நபர்கள் மட்டும் பணிபுரிவது வேதனை அளிக்கிறது. அதனால் வங்கி போன்ற போட்டித் தேர்வுகளில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் அதிக அளவு ஆர்வம் காட்ட தயாராக வேண்டும்.” என கூறியுள்ளார்.