பொருளாதார மந்த நிலையால் ஏற்படும் வேலையில்லா திண்டாட்டத்தை போக்க பல முன்னணி தனியார் நிறுவனங்கள் மெகா வேலைவாய்ப்பு முகாம்களை மாநிலங்கள் தோறும் நடைபெற்று வருகிறது. இந்த முகாம்களின் மூலம் இதுவரை 1,12,500 நபர்கள் பயனடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்நிலையில் சேப்பாக்கம் to திருவல்லிக்கேணி தொகுதிகளில் உள்ள இளைஞர்களுக்காக தினந்தோறும் இலவச பயிற்சி வகுப்பு நிகழ்ச்சியை விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அரசின் பணியிடங்களில் தமிழர்களின் பங்களிப்பு 2% மட்டுமே உள்ளது என அமைச்சர் உதயநிதி வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும் TNPSC, UPSC, SSC, IBPS போன்ற மத்திய, மாநில அரசுகளின் போட்டித் தேர்வுகளில் தமிழக இளைஞர்களின் பங்கீடு அதிகம் இருக்க வேண்டும். இதற்கான முதல் கட்ட நடவடிக்கையாக தொடங்கப்பட்டுள்ள இந்த பயிற்சி வகுப்பு விரைவில் அனைத்து தொகுதிகளிலும் தொடங்க திட்டமிடப்பட்டு வருகிறது. இதனால் பள்ளி கல்லூரி மாணவர்கள் கல்வி படிப்போடு அரசு போட்டித் தேர்வுகளுக்கும் தங்களை தயார் செய்து கொள்ள வேண்டும் என அமைச்சர் உதயநிதி கூறியுள்ளார்.