கொரோனாவில் இருந்து குணமடைந்தார் அமைச்சர் தங்கமணி!!

1

கொரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த மின்துறை அமைச்சர் தங்கமணி இன்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளார்.

கொரோனாவும் அமைச்சர்களும்:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்படுபவர்கள் எண்ணிக்கை தினமும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதனால் வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த தடுப்புப்பணிகளில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள் தொடர்ச்சியாக கொரோனா தாகத்திற்கு ஆளாகி வருவது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் மின்துறை அமைச்சர் தங்கமணி ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருந்தது.

கருப்பர் கூட்டம் யூ டியூப் சேனலை முடக்க வேண்டும் – தமிழ்நாடு குற்றப்பிரிவு போலீசார் அதிரடி..!!

இவர்களில் ஏற்கனவே இரண்டு அமைச்சர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பி உள்ள நிலையில் தற்போது மின்துறை அமைச்சர் தங்கமணி அவர்களும் கொரோனா தாக்கத்தில் இருந்து முழுவதுமாக குணமடைந்து உள்ளார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் இன்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here