கொரோனா வைரஸ் பாதிப்பால் தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, அவர்களுக்கு கிரேடு முறையில் மதிப்பெண்கள் வழங்கலாமா என்று அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசித்து வருகிறார்.
கொரோனா பாதிப்பு:
தமிழகத்தில் பொது முடக்கம் அமலில் இருந்ததால், 10 வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கபட்டது. மேலும், அதில் கூறப்பட்டு இருந்ததாவது, மாணவர்களுக்கு அவர்கள் ஏற்கனவே தேர்வுகளில் வாங்கிய மதிப்பெண்கள் பரிசலிக்கப்பட்டு
வழங்க படும் என்று கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
“அதில் இருந்த சிக்கல்”:
அதில் பல சிக்கல்கள் இருந்தது, என்னவென்றால், மாணவர்களின் கடந்த தேர்வுகளின் மதிப்பெண்கள், விடைத்தாள்கள் சரியாக பராமரிக்கப்படாததால், அவர்களுக்கு எப்படி மதிப்பெண்கள் வழங்க என்று புதிய குழப்பங்கள் ஆசிரியர்கள் மத்தியில் ஏற்பட்டது. . இதற்கு தீர்வு காணும் வகையில், மாணவர்களுக்கு ஏன் கிரேடு எனப்படும் ஏ, பி, மற்றும் சி போன்று வழங்கபடக்கூடாது என்று கேட்கப்பட்டது.
கொரோனாவால் பொதுசெயலாளர் மரணம்!! அதிர்ச்சியில் புதுச்சேரி!!
இது போல் மத்திய அரசு பள்ளி மாணவர்களுக்கு தான் வழங்குவார்கள், அதனால் இந்த முடிவினை பற்றி ஆலோசிப்பதாக கல்வி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.