தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு முகக்கவசம் – அமைச்சர் ஆர்.பி உதயகுமார்..!

0

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு விரைவில் முகக்கவசம் வழங்கும் பணி தொடங்கப்படும் என அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஆர்.பி உதயகுமார்..!

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறுகையில், அமைச்சர் தங்கமணி மின் கட்டணம் குறித்து விளக்கம் அளித்த நிலையிலும், மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தவே திமுகவினர் தேவையில்லாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. நாள் ஒன்றுக்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதில் 10%க்கும் குறைவாகவே பாதிப்பு எண்ணிக்கை உள்ளது.

பிரதமர் மோடி அரசின் சாதனைகள் குறித்து ராகுல் காந்தி கிண்டல்..!

மேலும் தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மலிவான விலையில் தரமான முகக்கவசங்கள் வழங்கும் பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here