100 நாள் திட்டத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளம் உயர்த்தி வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஐ.பெரியசாமி
தமிழக சட்டசபையில் அனைத்து துறைகளுக்கான மானிய கோரிக்கை நடைபெற்று வரும் நிலையில் இன்று நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல், ஊரக வளர்ச்சி துறைக்கான மானியக் கோரிக்கை அரங்கேறியது. அதன் படி சட்ட சபை கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் ஐ.பெரியசாமி ஆகியோர் உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்து பல்வேறு திட்டங்களையும் அறிவித்துள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
- தூய்மை காவலர்களின் மதிப்பூதியத்தை ரூ.3,000 ல் இருந்து ரூ.5,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும், இதற்கு ரூ.112 கோடி நிதி ஒதுக்கி உள்ளதாகவும் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
- ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் 2,043 புதிய சத்துணவு கூடங்கள் அமைக்க ரூ.154 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் 100 நாள் திட்டத்தில் வேலை பார்க்கும் அனைவருக்கும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ரூ.294 ஊதியமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.
- தமிழ்நாட்டில் உள்ள 2,500 ஊராட்சி பள்ளிகளில் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு ரூ.ரூ.300 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
- ஊரகப் பகுதிகளில் இரத்த சோகையை குறைக்கும் பொருட்டு 27 லட்சம் முருங்கை கன்றுகள் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
- ஊரக பகுதிகளில் உள்ள 10 வீடுகளில் ரூ.1,000 கோடி செலவில் குடிநீர் இணைப்பு வழங்கப்படும்.