தமிழகத்தில் BF7 தொற்று அதிகமானால் மீண்டும் கட்டுப்பாடுகள் கன்ஃபார்ம்., சுகாதாரத் துறை அமைச்சர் அதிரடி!!

0
தமிழகத்தில் BF7 தொற்று அதிகமானால் மீண்டும் கட்டுப்பாடுகள் கன்ஃபார்ம்., சுகாதாரத் துறை அமைச்சர் அதிரடி!!
தமிழகத்தில் BF7 தொற்று அதிகமானால் மீண்டும் கட்டுப்பாடுகள் கன்ஃபார்ம்., சுகாதாரத் துறை அமைச்சர் அதிரடி!!

சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் கொரோனா பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள ஆரம்ப நிலையத்தில் திருப்புட்குழி சித்தமருத்துவ பிரிவு கட்டிடம், மானாமதி புறநோயாளி பிரிவு கட்டிடம் போன்ற ஒன்பது கட்டிடங்களை அமைச்சர் மா.சுப்ரமணியன் திறந்து வைத்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

பின் இந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மா.சுப்பிரமணியன் சீனா,தைவான் ,ஜப்பான் மற்றும் ஹாங்காங் போன்ற நாடுகளில் உருமாறிய BF7 கொரோனா வைரஸ் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

ஆனால் இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கம் குறைவாகவே உள்ளது. எனவே தற்போது கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கவில்லை. ஒருவேளை கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்தால் கொரோன பரவலை தடுக்க கட்டுபாடுகள் விதிக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here